|  |  |  | | | | TechRenu.net | Tv Shows | Magazines | Tv Serials | Hot News | | | | | | | | |  |  |  | | | | |
டாஸ்மாக்கில் இனி இ - பில்லிங்: இனியாவது 'கட்டிங்' கொள்ளை குறையுமா? | TechRenu
சென்னை: இனி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இ பில்லிங் முறையை அறிமுகப்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விற்பனையாளர்கள் குடிமகன்களிடம் முறைகேடாக அதிக விலைக்கு மது விற்பதைத் தடுக்கவும், அனைத்து கடைகளின் விற்பனையையும் ஒரே நெட்வொர்க்கில் கொண்டு வரவும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துவதாக அரசு தெவித்துள்ளது. தமிழகத்திலுள்ள 6823 டாஸ்மாக் கடைகளுக்கும் இந்த இ பில்லிங் முறையை கொண்டு வரப் போகிறார்களாம். இதற்காக ஜி பி ஆர் எஸ் தொழில் நுட்பத்துடன் ரூ 5 கோடிக்கு பில்லிங் எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. இதுகுறித்து தெரிவித்த டாஸ்மாக் அதிகாரி ஒருவர், "டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்கள் 'குடிமக்களிடம் தங்கள் மனம்போல ஒரு விலையை நிர்ணயித்து, அரசையும், மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் அடிக்கும் 'கட்டிங்'கை தடுக்கவும், விற்பனை நிலவரம், ரொக்க நிலவரம், ஸ்டாக் நிலவரம் போன்றவற்றை ஒருங்கிணைக்கவுமே இந்த அதிரடி வேலையில் அரசு இறங்கியதாக" தெரிவித்தார். எல்லாம் சரிதான்.. ஆனால் கடைக்கு சரக்கு வந்ததுமே, அதை பக்கத்திலுள்ள பார்களில் வைத்து ஊழியர்களே பிளாக்கில் விற்கிறார்களே... இதை எப்படி தடுக்கப் போகிறது அரசு? இதற்கு எந்த வகையில் பில் போடுவார்கள்? Thanks to OneIndia  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Athipookal 22-10-12 | Sun Tv Shows Athipookal Serial 22nd October 2012
Update coming soon...pl wait | | | | | | | | | | | | | |  |  |  | | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
ஹாலிவுட் ரிலீசுக்கு முன் தமிழில் வரும் படம்|TechRenu சென்னை: வழக்கமாக ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆனபிறகோ அல்லது ஒரே நேரத்திலோ ஆங்கில படங்கள் இந்தியாவில் ரிலீஸ் ஆகும். 'அட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டுÕ என்ற படம் முதலில் இந்தியாவில் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகே ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் இதற்கு 'ரகசிய தீவுÕ என்று பெயரிடப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன் அழியும் தருணத்தில் டைனோசர்களும், மனிதர்களும் வாழ்ந்த தீவு பற்றிய கதை. சூர்யகாந்தி மணி என்ற விநோதமான ஒளிக்கற்றை அந்த கிராமத்தை காப்பாற்றி வருகிறது. அந்த ஒளி மங்கும்போது ஆபத்து சூழ்கிறது. கடலுக்கு அடியிலிருக்கும் மற்றொரு சூர்யகாந்தி மணியை இரண்டு இளைஞர்கள் கொண்டு வந்து எப்படி கிராமத்தை காக்கிறார்கள் என்பது கதை. இளைஞர்களாக காரல், டேவிட் நடித்துள்ளனர். மார்கோ பிரம்பில்லா இயக்கம். ஜி.கே.பிலிம்ஸ் வெளியீடு. தமிழில் ஏ.சீனிவாச மூர்த்தி வசனம் எழுதி உள்ளார். | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
சுடச்சுட கிளிப்பிங்ஸ் 22-10-2012 | TechRenu
புதுமுகங்கள் நடித்துள்ள 'கள்ள துப்பாக்கி படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து மறுஆய்வு கமிட்டிக்கு படத்தை திரையிட உள்ளார் தயாரிப்பாளர் ரவிதேவன்.
அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இறுதிகட்ட இசை கோர்ப்பை கேட்ட கார்த்தி, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நீண்டதொரு பாராட்டு எஸ்எம்எஸ் அனுப்பினாராம். இதை டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
கடந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களின் வசூல், தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டதாம்.
சற்குணம் இயக்கத்தில் விமல்-இனியா நடித்த 'வாகை சூட வா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கரண் நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் டோலிவுட்டில் டான் சுந்தரம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
இன்றைய கிசு கிசு 22-10-2012 | today gossip | TechRenu
மிரட்ற படத்துல நடிச்ச சான்டல்வுட் ஷர்மி நடிகை இப்ப சான்டல்வுட் பக்கம் தலை காட்றதில்லையாம்... இல்லையாம்... அடுத்து கோலிவுட் பட ஸ்கிரிப்ட் கேக்க தயாரா இருக்கறதா இயக்கங்களுக்கு தூது அனுப்புறவருக்கு டோலிவுட்ல நரேஷான ஹீரோவோட நடிக்க சான்ஸ் கெடச்சிருக்காம். கோலிவுட், டோலிவுட்லேயே கொஞ்ச நாள் நீடிச்சா லக்குல டாப் ஹீரோயின் லிஸ்டுக்கு போயிடுவேன்னு சொல்றாராம்... சொல்றாராம்...
முரணான படத்துல நடிச்ச ப்ரியமான ஹரி நடிகைக்கு கோலிவுட்ல வேற வாய்ப்பு கெடக்கலயாம்... கெடக்கலயாம்... ஆனா டோலிவுட்ல ஒரு படத்துல டபுள் ரோல்ல நடிக்க¤றாராம். இதுல ஒரு ரோல் ஹீரோவுக்கு தரும் இமேஜ்போல சூப்பர் வேஷமாம். இந்த மேட்டர தன்னைவிட படத்துல நடிக்கற வருணான ஹீரோதான் ஊர் முழுக்க பரப்பிட்டிருக்காராம். இதுல குஷியான அம்மணி வருண ஹீரோவை அன்போடு பாக்குறாராம்... பாக்குறாராம்... அவரும் அதே பாணில லுக் விட்றாராம். இப்படி பாத்துகிட்டிருந்தா காதல்ல போய் முடிஞ்சிடும் ஜாக்கிரதைன்னு தோழிங்க நடிகைக்கு எச்சரிக்கை பண்றாங்களாம்... பண்றாங்களாம்...
சமீபத்துல ரீ என்ட்ரி கொடுத்த ஸ்ரீ நடிகையோட படத்துல பைசா வாங்காம தல நடிகர் நடிச்சி கொடுத்தாரு. இதுல உச்சி குளுந்த நடிகை, தல படத்துல தன்னை நடிக்க கேட்டா நிச்சயமா நடிப்பேன்னு சொல்றாராம். சொல்லப்போனா, அவர் படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடவும் தயாருன்னு ஸ்டேட்மென்ட் விடுறாராம்... விடுறாராம்...
 | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
துளசி எனக்கு போட்டியா? : கார்த்திகா பேட்டி|techRenu சென்னை: தங்கை துளசி தனக்கு போட்டியா என்பதற்கு பதில் அளித்தார் கார்த்திகா. அவர் கூறியதாவது: பாரதிராஜா இயக்கும் 'அன்னக்கொடியும் கொடி வீரனும் ஷூட்டிங் தேனியில் நடந்தது. தற்போது அருண் விஜய்யுடன் நடிக்கும் 'டீல் பட ஷூட்டிங்கும் மீண்டும் தேனியில் நடக்கிறது. எனக்கும் தேனிக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கும் என்று நினைக்கிறேன். 'டீல்Õ படம் கமர்ஷியல் மசாலாவுடன் கூடிய காதல் கதையாக இருந்தாலும் இப்படத்திற்கான ஷூட்டிங் நடத்தவும் பொருத்தமான லொகேஷனாக தேனி அமைந்திருக்கிறது. அடுத்து புதுமுக இயக்குனர் சிவஞானம் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தை பொறுத்தவரை சமீபத்தில் 3 படங்களின் ஸ்கிரிப்ட் கேட்டேன். ஒவ்வொன்றும் வித்தியாசமானது. இம்மாத இறுதியில் அப்படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன். எனது தங்கை துளசி நடிக்கும் 'கடல் படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அடுத்து அவர் நடிக்கும் 'யான் டிசம்பரில் தொடங்க உள்ளது. நடிப்புக்கும் படிப்புக்கும் இடையில் அவர் சுழன்றுக்கொண்டிருக்கிறார். 'தங்கையும் நடிகையாக வருவது போட்டியா?என்கிறார்கள். அவர் திரையுலகுக்கு வருவது மகிழ்ச்சி. என் அம்மாவும், அவரது சகோதரி அம்பிகாவும் திரையுலகில் இருந்தனர். அந்த காலத்தில் பத்மினி, ராகினி சகோதரிகள் சாதனை படைத்திருக்கிறார்கள். இரட்டை சகோதரிகள் போல் நாங்களும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்.
 | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
ரஜினிக்கு கதை சொன்னது உண்மையா? : கே.வி.ஆனந்த் பதில்|-TechRenu சென்னை: ரஜினிக்கு கதை சொன்னது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக கிசுகிசு வருகிறது. அவரிடம் எந்த கதையும் சொல்லவில்லை. அவரை இயக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன். இப்போதைக்கு என் கைவசம் கதை எதுவும் தயாராக இல்லை. வேலை இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறேன். விரைவில் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுத தொடங்குவேன். 'மாற்றான் படத்தை பற்றி கலப்படமான விமர்சனம் வந்திருக்கிறது. சிலர் பாராட்டி இருக்கிறார்கள். சிலர் தலையில் குட்டி இருக்கிறார்கள். இப்படத்தின் கதையை பொருத்தவரை நடைமுறைக்கு சாத்தியமான விஷயத்தை கருவாக எடுத்துக்கொண்டோம். சூர்யா நடித்ததால் அதை சரியாக செய்ய முடிந்தது. ரஷ்ய நாட்டை விமர்சிப்பதுபோல் ஸ்கிரிப்ட் இருப்பதாக கூறுகிறார்கள். கற்பனையான ஒரு நாட்டின் பெயரில்தான் இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தணிக்கையில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதற்காக 10 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கே.வி.ஆனந்த் கூறினார்.
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் நயன்தாரா! | TechRenu நான் சைவத்துக்கு மாறிட்டேன் என்பதுபோலத்தான் நடிகைகள் சினிமாவில் கவர்ச்சி காட்டமாட்டேன் என்பதும். முதல் படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் வெற்றிக்குப் பின்னர் கொடுக்கும் பேட்டிகளுக்கு அளவே இருக்காது. ஆனால் இத்தனைப் படங்கள் நடித்த பின்னர் இப்போது கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறாராம் நயன்தாரா. இரண்டரை கோடி சம்பளம் நோ டர்ட்டி பிச்சரின் தமிழ் பதிப்பில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் இரண்டரை கோடியாம். தெலுங்கிலும் நயனிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்தே படத்தயாரிப்பாளர்கள் இந்த சம்பளத்தை தர முன் வந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். ஆனால் அதிக கவர்ச்சியும், ஓவர் நெருக்கமும் இனி நான் நடிக்கும் படங்களில் இருக்காது என்று கூறி நோ சொல்லிவிட்டாராம். காட்சிக்கு தேவையான கவர்ச்சி எனக்கு கவர்ச்சி சரியாக இருக்காது.இருந்தாலும் படத்தில் எந்த அளவிற்கு கவர்ச்சி தேவையோ அந்த அளவிற்கு கவர்ச்சியாக நடிப்பேன் என்று கூறுவார்கள். பின்னர் வாய்ப்பிற்காக எந்த அளவிற்கு கவர்ச்சி தேவையோ அதை விட கூடுதலாகவே கவர்ச்சியாக நடிப்பார்கள். நயன்தாராவும் அப்படித்தான் பாவாடை தாவணி, புடவை என்று குடும்ப குத்துவிளக்காக தமிழ், மலையாளப்படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கில் அதீத கவர்ச்சியில் களமிறங்கினார். கவர்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தமிழ் படங்களிலும் பட்டையை கிளப்பினார். சீதாதேவியாக வாழ்ந்த நயன்தாரா கவர்ச்சி தேவதையாக வலம் வந்த போதிலும் நயன்தாராவிற்கு காதலுக்கு பஞ்சமில்லை. பிரபுதேவா உடன் காதல் ஒருபுறம், சினிமாவில் கவர்ச்சியில் கலக்கல் மறுபுறம் என நடித்துக்கொண்டுதான் இருந்தார். இந்த சூழ்நிலையில் தெலுங்கு படத்தில் சீதையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு இடையே விரதமிருந்து சீதையாக நடித்தார். இதுதான் தனது கடைசிப்படம் என்று அறிவித்தார். படப்பிடிப்பில் அழுத நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்த நயன்தாரா நல்ல கதாபாத்திரத்துடன் விலகிவிடலாம் என்று நினைத்து சீதா கதாபாத்திரத்துடன் திரை உலகிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக கூறியிருந்தார். இதன் காரணமாக ராமராஜ்ஜியம் படப்பிடிப்பின் இறுதிநாளில் கண்ணீர் விட்டு அழுதாராம் நயன்தாரா. மீண்டும் நடிக்க வந்த நயன்தாரா பிரபுதேவா உடனான காதல் முறிவுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ள நயன்தாரா ஒரு சில இயக்குநர்களுக்கு மட்டுமே கால்சீட் கொடுத்திருக்கிறார். தமிழில் அஜீத்துடன் நடித்து வருகிறார். இருந்தாலும் தமிழிலும் தெலுங்கிலும் இன்னமும் வரவேற்பு இருக்கிறது. இதனால்தான் 'டர்ட்டி பிக்சர் படத்தில் எப்படியாகவது நயன்தாராவை நடிக்கவைக்க பலத்த சிபாரிசோடு சென்றிருக்கின்றனர் தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு நயன்தாரா சிம்பிளாக நோ சொல்லி அனுப்பிவிட்டாராம். இதுதான் கோலிவுட் உலகில் இன்றைக்கு ஆச்சரியமாக பேசப்படும் செய்தி. இனிமேல் கவர்ச்சி கிடையாதா நயன்தாரா? சீதா கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாராவிற்கு ஆந்திர மாநில அரசின் நந்தி விருது கிடைத்துள்ளது. சீதா வாக நடித்த தன்னால் இனி அதிக கவர்ச்சியாக நடிக்க முடியுமா என்ற தயக்கமே தற்போது அவர் இரண்டரை கோடி சம்பளத்தை கூட மறுக்க காரணமாக அமைந்துவிட்டது என்கின்றனர் நயன்தாராவிற்கு நெருக்கமானவர்கள்.
 | | | | | | | | | | | | | |  |  |  | | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Thiyagam 22-10-12 | Sun Tv Shows Thiyagam Serial 22nd October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Thiyagam 22-10-12 | Sun Tv Shows Thiyagam Serial 22nd October 2012
Update coming soon...pl wait | | | | | | | | | | | | | |  |  |  | | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Mutharam 22-10-12 | Sun Tv Shows Muthaaram Serial 22nd October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கொக்கு மருந்து சாப்பிட்டு கார்பென்டர் தற்கொலை|TechRenu கூடுவாஞ்சேரி: குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் கொக்கு மருந்து சாப்பிட்டு கார்பென்டர் தற்கொலை செய்து கொண்டார். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலையம் (25). கார்பென்டர். இவரது மனைவி சுமதி (21). கடந்த ஆண்டு தம்பதிக்கு திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி கோபித்துக் கொண்டு, அதே ஏரியாவில் உள்ள அம்மா வீட்டுக்கு போய்விட்டார். நேற்று முன்தினம் மாமியார் வீட்டுக்கு சென்ற பாலையம், குடும்பம் நடத்த வரும்படி மனைவியை அழைத்தார். ஆனால் கணவருடன் வர சுமதி மறுத்து விட்டார். இதனால் மனவேதனையில் இருந்த பாலையம், கொக்கு மருந்தை சாப்பிட்டுள்ளார். வீட்டின் அருகே மயங்கி கிடந்தவரை அங்கிருந்தவர்கள் செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். நேற்றிரவு பாலையம் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி எஸ்ஐ லூர்துசாமி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |  தனுசுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடைபோடும் சிம்பு!-TechRenu வேட்டைமன்னன், வாலு என இரண்டு படங்களிலும் ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்கி விட்டார் சிம்பு. இதற்கிடையே சிங்கம்-2, சேட்டை படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் சொட்ட வாளக்குட்டி படத்தில் நடிப்பதற்கு ஹன்சிகாவிடம் கால்சீட் கேட்டு வருகிறார் அப்படத்தின் இயக்குனரான சற்குணம். ஆனால் இதோ அதோ என்று அவரை டீலில் விட்டு வருகிறார் நடிகை. இதுபற்றி ஹன்சிகாதரப்பை விசாரித்தபோது, என்னதான் சிம்பு, தனுஷ் இருவரும் மேடை நாகரீகம் கருதி நண்பர்களாக பேசிக்கொண்டாலும் அவர்களுக்கிடையே தொழில் போட்டி என்பது இருந்துதான் வருகிறது. அதனால், தனுஷ் படத்துக்கு ஹன்சிகாவை அழைக்கிறார்கள் என்றதும், நான் வாலு படத்தை முடித்த கையோடு மீண்டும் வேட்டை மன்னனுக்கு தேவையான காட்சிகளையும் படமாக்குவேன். எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டியிருக்கும். அதனால் சேட்டை, சிங்கம்-2 படத்துக்குப்பிறகு எந்த புதிய படத்தையும் இப்போதைக்கு ஓ.கே பண்ண வேண்டாம் என்று ஹன்சிகாவிடம் கண்டிசனாக கூறியுள்ளாராம் சிம்பு. அதனால்தான் தனுஷ் படத்தை விடவும் முடியாமல் தொடவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
பொதுஇடங்களில் புகை பிடித்த 50 பேருக்கு அபராதம்|Techrenu ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் உதயகுமார், ரமேஷ், ஸ்டாலின் ஆகியோர் கொண்ட குழு நேற்று ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடித்த 50க்கு மேற்பட்டோரை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் மொத்தம் ரூ.6 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்களிடம் பொது இடங்களில் புகை பிடிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என எச்சரித்தனர். மீறினால் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
கைதிலிருந்து தப்ப தமிழகத்தை விட்டு ஓடினார் நித்தியானந்தா! | TechRenu திருவண்ணாமலை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கொடுத்துள்ள போலீஸ் புகாரின் பேரில் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே போய் விட்டார். அவர் தற்போது கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குப் போயிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அதே அருணகிரிநாதரால் நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் மதுரை ஆதீன மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த நிலையில், மதுரை ஆதீனம் சார்பில் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நித்தியானந்தாவை நீக்கியிருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியிருந்தார்.இதையடுத்து அந்தப் புகாரின் பேரில் நித்தியானந்தாவை தூக்கி உள்ளே போட காவல்துறையினர் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை உணர்ந்த நித்தியானந்தா, தனது திருவண்ணாமலை மடத்தை விட்டு வெளியேறி விட்டாராம்.அவர் தற்போது பிடதி ஆசிரமத்திற்குப் போய் விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து திருவண்ணாமலை மடத்தின் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சுவாமி தலைமறைவாகவில்லை. ஆதீனப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு திருவண்ணாமலையில் அவருக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க அவர் தனது சீடர்களுடன் பிடதி ஆஸ்ரமத்துக்கு சனிக்கிழமை மாலை புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். இத்துடன், அங்கு இம் மாதம் 28-ம் தேதி வரை நித்யானந்தாவே தியானப் பயற்சி நடத்துகிறார். திருவண்ணாமலைக்கு அவர் எப்போது வருவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றனர்.ஆனால் இப்போதைக்கு அவர் தமிழ்நாட்டுப் பக்கம் வருவதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். ஏற்கனவே பிடதி ஆசிரமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தமிழகத்திற்கு வந்தார் நித்தியானந்தா. தற்போது மறுபடியும் அதே பிடதிக்குப் போயுள்ளார். ஏற்கனவே கர்நாடகத்திலும் அவருக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் இருப்பது நினைவிருக்கலாம்.Thanks to OneIndia | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
7 மாணவர்களுடன் எக்குத்தப்பான உறவு... கைதானார் கணக்கு டீச்சர்! | TechRenu அயோவா சிட்டி: அமெரிக்காவின் அயோவா நகரில், கணித ஆசிரியையாக இருக்கும் 24 வயது பெண், தன்னிடம் படித்து வந்த 7 மாணவர்களிடம் முறைகேடான உறவில் ஈடுபட்டதாக கைதாகியுள்ளார்.இதில் 4 பேருடன் அவர் செக்ஸ் உறவு வைத்திருந்தார். 3 பேரிடம் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும் தனது நிர்வாணப் படங்களை இந்த மாணவர்களுக்கு அனுப்பி அவர்களுக்கு கிளர்ச்சியூட்டி தன் இச்சைக்குப் பயன்படுத்தியுள்ளார்.இவரது பெயர் ஆஷ்லி நிக்கோல் ஆண்டர்சன். முதலில் இவர் 18 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்திருந்தார். இதை அவர் கோர்ட்டில் ஒத்துக் கொண்டுள்ளார். மொத்தம் நான்கு பேருடன் தான் செக்ஸ் உறவு வைத்திருந்ததாகவும், 3 பேருடன் வாய் வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டதாகவும் ஆஷ்லி கூறியுள்ளார்.அயோவா சிட்டியில் உள்ள ஆப்லிங்டன் பார்க்கர்ஸ்பெர்க் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக ஆஷ்லி இருந்தார். இவர் தனது வலையில் மாணவர்களை வீழ்த்துவதற்காக தனது கவர்ச்சிப் படங்களையும், நிர்வாணப் படங்களையும் அந்த மாணவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த கூத்து நடந்து வந்துள்ளது.இவர், 18 வயது மாணவனுடன் தனது வீட்டில் உறவு கொண்டுள்ளார். பின்னர் 16 வயது மாணவனுடன் உறவு கொண்டுள்ளார். அதேபோல 17 வயது மாணவன் ஒருவனுடன் சாலையோரமாக வைத்து உறவு கொண்டுள்ளார். மேலும் ஒரு மாணவனுடனும் இதுபோல உறவு கொண்டுள்ளார்.ஆஷ்லியைக் கைது செய்த போலீஸார் அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கலாம்.Thanks to OneIndia  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
துரை தயாநிதி எங்கே?.. 'டாப்சி புகழ்' நடிகர் மகத்துக்கு போலீஸ் சம்மன்! | TechRenu மதுரை: கிரானைட் மோசடி வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் மறைவிடம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் மகத்துக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.துரை தயாநிதியின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக மதுரை போலீஸார் ஏகப்பட்ட ரூட்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பலரையும் நேரில் அழைத்து விசாரித்துப் பார்த்து விட்டனர். ஒன்றும் தேறவில்லை.இந்த நிலையில் நடிகர் மகத்துக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த மகத் மங்காத்தா படத்தில் நடித்தவர். நடிகை டாப்சியுடன் நட்பு வைத்துக் கொள்வது தொடர்பான கலாட்டாவில் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனுடன் கடும் சண்டையிலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். அப்போதே இவர் குறித்தும் ஏகப்பட்ட செய்திகள் உலா வந்தன.இவரும் துரை தயாநிதியும் நெருங்கிய நண்பர்கள். இந்த அடிப்படையில் மகத்தைப் பிடித்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனராம். இது தொடர்பாக மகத்துக்கு சம்மனும் போயுள்ளதாம்.Thanks to OneIndia | | | | | | | | | | | | | |  |  |  | | | | | ரோபோரஜினி கண்ணாடிஅணிந்ததன் ரகசியம் | TechRenu எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி எப்போதுமே கண்ணாடி அணிந்து நடித்தன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஏதோ விஞ்ஞானியான வசியையும், ரோபோ கதாப்பாத்திரமான சிட்டியையும் வேறுபடுத்திக் காட்ட ஷங்கர் செய்த வியூகம் இது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால் அது விஷூவல் கிராபிக்ஸ்க்கு ஆகும் செலவை பன்மடங்கு குறைக்க எடுத்த முடிவு என்று இப்போதுதான் தெரிய வந்துள்ளது. எந்திரன் படத்தில் விஷூவல் எபெக்ட்டுக்காக திட்டமிடப்பட்டிருந்தது ரூ.70 கோடி. ஆனால், மூன்றே மூன்று விஷயங்களைக் கடைபிடித்து விஷூவல் எபெக்ட்டுக்கான செலவை ரூ.20 கோடியாக குறைத்துள்ளார் விஷூவல் எபெக்ட் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாஸ் மோகன். விஷூவல் எபெக்டில் கண்களின் அசைவை துல்லியமாகக் கொண்டு வர நீண்ட நேரம் ஆகும். எனவேதான், ஷங்கரிடம் பேசி, ரோபோ ரஜினிகாந்த்தின் உடலில் மூன்று விதமான மாற்றங்களை செய்ய ஆலோசனை கூறினேன். முதலில் எப்போதுமே கூலிங் கிளாஸ் அணிந்து தோன்றுவது. இதனால் கண்களின் அசைவை உருவாக்க அதிக நேரம் செலவிடத் தேவையில்லை. பிறகு அதிகமாக அசையும் தலை முடியை ஒருபோல குட்டையாகக் காண்பிப்பது, லெதர் ஆடை அணிவது போன்றவை கடைபிடிக்கப்பட்டதாகவும், இதனால் 70 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாயாக விஷூவல் எபெக்ட்டுக்கான செலவு குறைக்கப்பட்டதாகவும் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். இப்போது புரிகிறதா கண்ணாடிக்கு பின்னாடி என்ன இருந்தது என்று?  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Dinamalar Epaper 22-10-12 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 22nd October 2012 Download Link | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Dinamalar Computermalar Book 22-10-12 | Free Download Computer Malar E-book PDF | Computermalar 22nd October 2012 ebook
Download Link | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Dinakaran Epaper 22-10-12 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 22nd October 2012
Download Link | | | | | | | | | | | | | |  |  |  | | | | | என்னவாயிருந்தா உனக்கென்ன?..'| TechRenu தனது பெருத்த உடலைக் கிண்டலடிப்போருக்கு நோஸ் கட் கொடுக்கும் வகையில் பிகினி உடை அணிந்து, அந்தக் கவர்ச்சிகரமான போஸைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் போட்டு கலக்கலான வாசகங்களையும் இணைத்துள்ளார் நியூயார்க் மாணவி. அந்தப் படத்துக்கு லட்சக்கணக்கில் 'லைக்' கிடைத்து பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. என் சைஸ் என்னவாயிருந்தா உனக்கென்ன ... இதுதான் அந்தப் பெண் கேட்டிருக்கும் கேள்வி. இந்தப் புகைப்படத்தை வெளியிடும் நோக்கம் குறித்து விளக்கியுள்ள அவர், பெண்களின் உடல் அழகைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள், கேலி செய்கிறார்கள். ஆனால் அவர்களது மனதைப் பார்ப்பது வெகு வெகு சிலரே. எனது உடல் அழகைப் பலரும் கேலி செய்துள்ளனர். ஆனால் அப்படிப்பட்டவர்களுக்குப் பதிலடி தரும் வகையில்தான் பாடம் கற்பிக்கும் நோக்கில்தான் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். இவரது பெயர் ஸ்டெல்லா போன்ஷோப்ட். முதலில் இவர் ஒரு பிளாக்கில்தான் தனது படத்தைப் போட்டிருந்தார். அதில் பிரா மற்றும் பேண்டீஸில் அவர் காணப்பட்டார். இந்தப் படத்தைப் பார்த்த போட்டோகிராபர் பிரான்டன் ஸ்டேன்டன் என்பவர், தனது இணையதளத்தில் இதை எடுத்துப் பிரசுரித்தார். அதன் பின்னர் பேஸ்புக்கிலும் இந்தப் படத்தைப் போட்டார் பிரான்டன். அதன் பிறகுதான் ஏகப்பட்ட பிரபலமானது இவரது புகைப்படம்.இதுவரை நாலரை லட்சத்திற்கும் மேற்பட்ட லைக் இப்படத்துக்குக் கிடைத்துள்ளது. 20 ஆயிரம் முறை இது ஷேர் செய்யப்பட்டுள்ளது.இந்தப் படம் எடுக்கப்பட்டதே சுவாரஸ்யமானது. மன்ஹாட்டன் பகுதியில் பிரான்டனை ஒருமுறை ஸ்டெல்லா சந்தித்தார். அப்போது தன்னை ஒரு புகைப்படம் எடுக்குமாறு ஸ்டெல்லாவிடம் பிரான்டன் கேட்டார். பதிலுக்கு தன்னையும் பிகினி உடையில் படம் எடுக்குமாறு ஸ்டெல்லா கேட்டுக் கொண்டார். அதன்படி எடுக்கப்பட்டதுதான் இந்தப் படம். இந்தப் படத்திற்கு லட்சக்கணக்கில் லைக் கிடைத்ததைப் பார்த்ததும் அழுது விட்டாராம் ஸ்டெல்லா. மேலும் தனது உடலைத்தான் இத்தனை பேரும் பார்த்துள்ளனர் என்றும் அவர் நினைத்து புகைப்படத்தையே எடுத்து விடலாமா என்று நினைத்தாராம். இருப்பினும் படத்தைப் பார்த்தவர்கள் கொடுத்த நல்ல கமெண்டுகளைப் பார்த்து சந்தோஷமடைந்த அவர் படத்தை எடுக்கும் முடிவைக் கைவிட்டாராம். அத்தனை பேரும் ஸ்டெல்லாவின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வெகுவாகப் பாராட்டித் தள்ளியுள்ளனர் என்பது ஸ்டெல்லாவுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். இதுகுறித்து ஸ்டெல்லா கூறுகையில், என்னைப் போன்ற உடல் அமைப்பு பெருத்த இளம் பெண்கள் படும் சிரமங்கள், கேலி, கிண்டல்களை நான் அறிவேன். தயவு செய்து பெண்களின் உடல் அழகைப் பார்க்காதீர்கள், மனங்களை மட்டுமே பாருங்கள். என் சைஸ் என்னவென்று கவலைப்படாதீர்கள் என்று கூறுகிறார்.  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
CinemaExpress 16 to 31-10-2012 | Free Download CineMa Express Magazine Pdf This week | Cinemaexpress 16th to 31st October 2012
Download Link file Processing...p lwait | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Bairavi 21-10-12 | Sun Tv Shows Bairavi Thiriller Serial 21st October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Neeya Naana 21-10-12 | Vijay Tv Shows Neeya Naana 21st October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Neeya Naana 21-10-12 | Vijay Tv Shows Neeya Naana 21st October 2012
Update coming soon..pl wait | | | | | | | | | | | | | |  |  |  | | | | | அதிகாலை நேரம்.... அப்படியொரு குளிர்... ரயிலில் பயணம் போன 'நிர்வாண' இளம் பெண்! | TechRenu வியன்னா: ஆஸ்திரியாவில் அதிகாலையில் ரயில் பயணிகளை சூடேற்றும் வகையில் நிர்வாணமாக வலம் வந்த பெண் யார் என்ற ஆராய்ச்சிதான் அந்நாட்டு பத்திரிகைகளின் முக்கிய அசைன்மெண்ட்டாகிவிட்டது!ஆஸ்திரியாவின் கார்டிங்கல் நாகி ப்ளார்ட் ஸ்டேஷன் அருகே அதிகாலை நேரத்தில் வெறும் ஷூ மட்டும் போட்டுக் கொண்டு பயணிகளுக்கு ஒரு இளம் பெண் நிர்வாண போஸ் கொடுக்க எல்லோரும் வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலரோ எல்லாவிதமான ஆங்கிளிலும் போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி 'ஜாலி' போஸ் கொடுத்துவிட்டு எதுவுமே சொல்லாமலேயே அந்த பெண் போய்விட்டார்.இப்படி நிர்வாண போஸ் கொடுத்த பெண் யார்? என்பதுதான் அந்த நாட்டு பத்திரிகையாளர்களின் பிரதான பணியாகிவிட்டது. உலகம் முழுவதும் அந்த நிர்வாண படம்தான் இப்போ 'போகஸில் இருக்கிறது, | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
கணவரோட இதயத்தை ஜெயிக்கணுமா? | TechRenu திருமணமாகி புகுந்த வீடு போகும் பெண்ணுக்கு பலரும் பலவிதமாக அட்வைஸ் செய்து அனுப்புவார்கள். அதெல்லாம் கொஞ்சம் அச்சத்தை ஏற்படுத்தினாலும் காதில் போட்டுக்கொண்டுதான் அவர்கள் புகுந்த வீட்டிற்குள் நுழைவார்கள். புதுப்பெண்ணிற்கு முதல் அறிமுகம் கணவர்தான் அவரது இதயத்தை கவர சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் அனுபவசாலிகள் அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.அன்போட அணுசரனையும் அவசியம்கணவன் மனைவி இடையேயான உறவுக்குள் யாரும் நுழைய அனுமதிக்கக் கூடாது. அந்த அளவிற்கு கணவரை புரிந்து சின்னச் சின்னச் தேவைகளைக் கூட நிறைவேற்றினால் கணவர் குளிர்ந்து போவார்.இறுக்கமா கட்டிப்பிடிங்கபடுக்கை அறையில் மட்டும்தான் கணவருடன் ரொமான்ஸ் செய்யவேண்டும் என்றில்லை. ஆளில்லாத நேரத்தில் சமையல் அறையோ, பாத்ரூமோ எங்காவது தனியாக சந்திக்க நேரிட்டால் சின்னதாய் ரொமான்ஸ் செய்யுங்களேன். இறுக்கமாய் கட்டிப்பிடித்து காதோரம் கிசுகிசுப்பாய் ஐ லவ் யூ சொல்லுங்கள். சொக்கிப்போவார் உங்கள் கணவர்.அவருக்கு எது ஃபேவரைட்?படுக்கை அறையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நிறைய அட்வைஸ் கொடுத்துதான் அனுப்புவார்கள். அதிகமாக வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காமல் கொஞ்சம் அவருக்கு ஃபேவரைட் பொசிசனுக்கு ஒத்துழைப்பு கொடுங்களேன். இதன் மூலம் கணவரின் மனதில் எளிதில் இடம் பிடிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.உடையில் கொஞ்சம் தாராளம்எப்பொழுது பார்த்தாலும் இழுத்துப் போர்த்திய புடவையில் வலம் வரும் நீங்கள் கணவருடன் தனித்திருக்கும் நேரத்திலாவது கொஞ்சம் தாராளமாக இருங்களேன். கணவரின் முன்னிலையில் உடைமாற்றுவது, படுக்கை அறையில் உள்ளாடை தெரியுமாறு பளிச் நைட்டி அணிவது போன்றவை கணவரின் மனதை கவருமாம்.படுக்கை அறையை அலங்கரியுங்கள்படுக்கை அறை எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்தால் போரடிக்கும். எனவே அவ்வப்போது சின்னச் சின்ன மாற்றங்களை செய்யுங்கள். படுக்கையில் சில அலங்காரங்கள். மனம் மயக்கும் ரூம் ப்ரெஸ்னர் போன்றவைகள் கணவருக்கு பிடித்தமானதாக இருந்தால் அப்படியே மயங்கிப் போவார் உங்களவர்.அவருக்கு என்ன பிடிக்கும்?கணவருக்குப் பிடித்த மாதிரியான சுவையில் சமையல் செய்து கொடுத்தால் போதும் அப்புறம் வேறு எந்த சுவையையும் அவர் விரும்பமாட்டார். அதேபோலத்தான் படுக்கை அறையிலும் சில விசயங்கள் கணவருக்கு பிடித்தமாதிரி அமைந்துவிட்டால் நீங்கள்தான் அவரின் இதயம் கவர்ந்த ராணி என்கின்றனர் நிபுணர்கள். அப்புறம் என்ன கணவரின் இதயத்தைக் கவர நிபுணர்கள் கூறியதை பின்பற்றுங்களேன்.Thanks to OneIndia | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
ஆளே இல்லாத டீக்கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க பாஸ்?| TechRenu தலைப்பை பார்த்த உடன் என்னவென்று நினைக்கிறீர்களா? எல்லாம் மாற்றான் படத்தை பற்றிதான். ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்த சூர்யா என்று எதிர்பார்ப்போடு போனவர்களுக்கு ஏமாற்றத்தை தந்த படம் என்றாலும் படத்திற்கு விளம்பரம் மட்டும் சேனல்களில் குறைவின்றி செய்யப்படுகிறது.பக்கம் பக்கமா பலே பேச்சுஅது போகட்டும் காசு இருக்கு விளம்பரம் பண்றாங்க என்று விட்டுவிடலாம். ஆனால் சேனல்களில் படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக பேசும்போதுதான் சிரிப்பு வருகிறது.சீன் பை சீன் விளக்கம்ஞாயிறு காலை 9.30 மணிக்கு சன் டிவியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். மாற்றான் இயக்குநர் கே.வி. ஆனந்த் தொடங்கி எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் சீன் பை சீன் படத்தை பற்றி விளக்கினார்கள்.லிங்குசாமியின் காமெடிஇதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் பேசினார் இயக்குநர் லிங்குசாமி. ஏதாவது ஒரு படத்தைப் பற்றி பேசினாலே முதல்நாள் முதல்ஷோ பார்க்கவேண்டும் என்று நினைப்போம். அதே மாதிரிதான் மாற்றான் படமும் என்று போட்டாரே ஒரு போடு. மிகப்பெரிய காமெடி கேட்டதுபோல சிரிக்கத்தான் முடிந்தது.மாற்றான் பார்ட் 2!இதைவிட பெரிய நகைச்சுவை என்னவென்றால், மாற்றான் புரமோஷனுக்கு சன் டிவிக்கு போயிருந்தவரிடம், 'இப்படத்தின் செகன்ட் பார்ட் வருமா?' என்று கேட்டதுதான் தாமதம் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்ட் பார்ட்டாக சிரித்து சமாளித்திருக்கிறார் சூர்யா.Thanks to OneIndia | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
காங்கிரஸில் நமீதா...? உற்சாகத்தில் கதர்ச் சட்டைகள் | TechRenu ஆள் ஆளுக்கு அரசியல்வாதியாகவேண்டும் என்ற ஆசை ஆட்டிப்படைக்கிறது. இந்த அரசியல் ஆசை 'மச்சான்' நடிகை நமீதாவையும் விட்டு வைக்கவில்லை. அரசியலில் சேருவதைப் பற்றி யாராவது கேட்டால் அதைப்பற்றி சொல்லவேண்டிய நேரத்தில் சொல்வேன் என்கிறாராம்.எந்த கட்சி என்று கேட்டால் கதராடை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று சூசகமாக சொல்கிறார் நமீதா. சத்தியமூர்த்திபவன் வாசிகள் இப்போதே சந்தோசத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்டனராம்.மானட மயிலாடவில் இருந்து நமீதாவை கழற்றிவிட்டதுதான் அவரின் இந்த கதர் பாசத்திற்கு காரணம் என்றும் கோலிவுட் பக்கம் தகவல்கள் கசிகின்றன.Thanks to OneIndia | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Saravanan Meenakshi 22-10-12 to 26-10-12 This Week Promo video | Vijay tv Shows Saravanan Meenachi 22nd to 26th October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Sun Express 21-10-12 | Sun Tv Show SunExpress 21st October 2012 | Vivel Sun Express Episode 1
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Kitchen SuperStars 21-10-12 | Vijay Tv shows Kitchen Super Stars 21st October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Making Of Maatram Movie 21-10-12 | Vijay tv Shows Making Of Maatran 21st October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
Ungalil Yaar Prabhudeva Season 2 21-10-12 | Vijay Tv Shows Ungalil Yaar Prabhudeva 2 21st October 2012
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
முதல் மனிதன் குரங்கா இல்லை, அணிலா?| TechRenu வாஷிங்டன்: நமது மூதாதையர் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லையாம். மாறாக அணில் போல இருந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரிய வந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பாசிலில் உள்ள உருவம்தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது. ஏல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுதான் இந்த ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது. மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இந்த அணில் போன்ற உயிரினம்தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த புர்கடோரியஸ் இனமானது, டைனோசர்கள் அழிந்த சில காலத்திற்குப் பின்னர் வாழ்ந்துள்ளது. அதாவது பாலியோசீன் காலத்தில் இது வாழ்ந்துள்ளது. பாலூட்டியான இந்த அணில் உருவ உயிரினம், மிகவும் சிறியதாக இருந்துள்ளது. பழுப்பு நிறத்தில் இருந்துள்ளது. நல்ல அடர்த்தியான வாலும் இதற்கு இருந்துள்ளது. இதன் மொத்த எடையானது 1.3 அவுன்ஸ்தான். நல்ல பெரிய பற்கள் இதற்கு இருந்துள்ளது.மனிதனின் பூர்வீகம் குறித்து இன்னும் என்னவெல்லாம் வரப் போகிறதோ...!Thanks to OneIndia  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
'டாப் கியரில்' சன்னி லியோன் .. பை நிறைய 3 படம்.. 'டப்பு' ரூ. 5 கோடி!| TechRenuமுதல் படமான ஜிஸ்ம் 2 ஊத்திக் கொண்டாலும் கூட சன்னி லியோன் மீதான கிரேஸ் போகவில்லை நம்மூர் தயாரிப்பாளர்கள் மத்தியில். தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டுள்ளது.கனடாவில் போர்ன் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சன்னி லியோன். ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து பாலிவுட் திரை உலகில் காலடி வைத்தார்.முதல் படம் ஊத்திக் கொண்டது. இருந்தாலும் சன்னிக்கு சுக்கிர திசைதான் போலிருக்கிறது. அலும்ப்ரா எண்ட்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தங்களின் அடுத்த மூன்று படங்களில் நடிக்க சன்னி லியோனை புக் செய்துள்ளனர். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் தருவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.இது குறித்து கருத்து கூறியுள்ள நிறுவனத்தின் தலைவர் பராக் சங்கவி, ஜிஸ்ம் 2 விற்கு பிறகு எங்களின் அடுத்தடுத்த படங்களில் சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். 2013ம் ஆண்டு தொடக்கத்தில் முதல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கான நடிகர், நடிகையர்கள் தேர்வு நடைபெற உள்ளது என்றார்.அலும்ப்ரா எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் ராகினி எம்.எம்.எஸ், பூட் ரிட்டன்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளது. தற்போது வார்னிங், 26/11 போன்ற படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தினர் தயாரிக்க உள்ள படங்களில் சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளதன் மூலம் பாலிவுட் படவுலகில் முக்கியமான இடத்தை தக்கவைத்துக்கொள்வார் என்றே தெரிகிறது.Thanks to OneIdnia  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
விளம்பரங்களில் நடிக்கும் முன் யோசியுங்கள் நடிகர், நடிகைகளே!| judge-s-advise-cini-actors-TechRenu சென்னை: வாங்கும் பொருளின் தரம் குறைவாக இருந்தால் அந்த பொருளுக்கான விளம்பரப் படத்தில் நடிகர், நடிகையர்கள் மீது வழக்குப் போடலாம் என்று நுகர்வோர் தீர்பாயத்தலைவர் ரகுபதி கூறியுள்ளார். ஊசி முதல் வீடு வரை எந்தப் பொருளாக இருந்தாலும் நடிகையோ, நடிகரோ, கிரிக்கெட் வீரரோ வந்து சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வாங்கியப் பின்னர்தான் தெரியும் அந்தப் பொருளின் தரம். ஈமு கோழியில் லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்த விவசாயிகள் கூட ஏமாந்த பின்னர் நடிகர்கள் சொன்னதால்தான் ஈமு கோழியில் பணத்தை முதலீடு செய்ததாக கூறினர்.அந்த அளவிற்கு நடிகர், நடிகையர்கள், விளையாட்டு வீரர்கள் சொல்வதை நம்பி பொருட்களை வாங்குகின்றனர். அவ்வாறு நம்பி வாங்கப்படும் பொருளின் தரம் குறைவாக இருந்தால் விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகையர்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று நீதிபதி ஆர். ரகுபதி கூறியுள்ளார்.தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில் சனிக்கிழமையன்று `நுகர்வோர் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி ஆர்.ரகுபதி பேசியதாவது:- சினிமா நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களில் இடம் பெறுகின்றனர். அந்த விளம்பரங்களில், அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்கள் தரமானது, அந்த நிறுவனத்தின் சேவை தரமானது என்று உத்தரவாதம் அளித்து பேசுகின்றனர். இப்படி விளம்பரம் செய்து, பொருட்களை விற்பனை செய்யும் அந்த நிறுவனங்கள், தரமற்ற பொருட்கள், குறைபாடுள்ள சேவைகள் வழங்கும்பட்சத்தில், அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்கள் வழக்கு தொடரும்போது, விளம்பரத்தில் வந்த நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து வழக்கு தொடரலாம் இவ்வாறு நீதிபதி ரகுபதி கூறினார். நடிகர், நடிகையர்கள் விளம்பரத்திற்காக பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்வது நல்லது.
 | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
அழுவது நல்லதாம்...!TechRenuஇன்றைய தலைமுறையினரிடம் ஒரு பழக்கம் இப்போது சாதாரணமாக காணப்படுகிறது. அதாவது என்னதான் இழைந்து பழகினாலும் கூட ஏதாவது ஒரு பிரச்சினை என்று வந்து விட்டால் ஈகோவைத் தூக்கி முன்னால் வைத்து விடுகிறார்கள். நீ பெரிய ஆளா, இல்லை நான் பெரிய ஆளா என்பதே அவர்களுடைய முக்கியப் பிரச்சினையாகி விடுகிறது.நீ என்னை என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள், எனக்குக் கவலையில்லை. நான் இப்படித்தான் இருப்பேன். உனக்காக நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறுவோர்தான் பலரும் உள்ளனர்.ஆனால் மன நல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா... விட்டுக் கொடுங்கள், உங்கள் துணை உங்களை விட குரல் உசத்திப் பேசுகிறார்களா, நீங்கள் தணிந்து போய் விடுங்கள். உங்களுக்கு வருத்தமாக, ஏமாற்றமாக இருக்கலாம்.. ஆனாலும் தணிந்து போவதும், பணிந்து போவதும் உங்களை நிச்சயம் தலை நிமிரவே வைக்கும் என்பதே அவர்கள் தரும் அட்வைஸ் ஆகும்.அதை விட இன்னொரு முக்கியமான அட்வைஸையும் அவர்கள் முன்வைக்கிறார்கள். அது அழுகை...பேசித் தீர்க்க முடியவில்லையை...அழுது தீர்த்து விடுஙக்ள் என்பதே அவர்கள் தரும் அட்வைஸ். உங்களுக்குள் அழுத்தம் அதிகமாக அதிகமாக அது உங்களை வருத்தும், உடல் நலனைப் பாதிக்கும். அதற்குப் பேசாமல் நன்றாக மனம் விட்டு அழுது விடுங்கள், ஈகோ பார்க்காதீர்கள், உங்களது துணையைப் பேசி சரி செய்ய முடியவில்லையா, கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் மனது விட்டு அழுது விடுங்கள். அது உங்களை இயல்பாக்க உதவும் என்பதே அவர்கள் தரும் அட்வைஸ்.இப்படி அழுது தீர்க்கும்போது உங்களது மனதை, உங்களது இதயத்தை, உங்களது உண்மையான அன்பை உங்களது துணை உணர, புரிந்து கொள்ள, உங்களது காதலின் ஆழத்தை புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் என்கிறார்கள் இவர்கள்.உங்களது துணை உங்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறாரா அல்லது நிராகரிக்க முயல்கிறாரா, நீ எனக்கு் தேவை என்பதை உங்களது செயல்பாடுகளால் உணர வையுங்கள் என்றும் இந்த மன நல நிபுணர்கள் கூறுகிறார்கள்.பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை. ஆனால் வந்த பிரச்சினையை புத்திசாலித்தனமாக, சாதுரியமாக தீர்ப்பதுதான் பலருக்குப் பிரச்சினையாக உள்ளது. பிரச்சினைகளைத் தீர்க்க முயலும்போது ஈகோ பார்ப்பது, கெளரவம் பார்ப்பது, சங்கடப்படுவது வேலைக்கு ஆகாது. மாறாக, யாராவது ஒருவர் இறங்கிப் போய் விட வேண்டும். அப்போதுதான் அடுத்தவர், தனது துணையின் உண்மையான அன்பையும், கவலையையும், காதலையும் உணர வாய்ப்பு கிடைக்கும் என்பதும் இவர்கள் சொல்லும் இன்னொரு அட்வைஸ்.எனவே பிரச்சினைகளைத் தீர்க்க நன்றாகப் பேசுங்கள், மனம் விட்டுப் பேசுங்கள், தேவையானால் மனசார அழுது விடுங்கள். அழுத்தம் குறையும், தெளிவு கிடைக்கும், தீர்வும் புலப்படும்.Thanks to OneIndia  | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
இம்சை அரசன் 23ம் புலிகேசி - 2 | TechRenu இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் மெகா ஹட் ஆனது. இதனையடுத்து தற்போது பட வாய்ப்புகள் தேடி வரும் வடிவேலுக்கு மீண்டும் ஒர நல்ல செய்தி வந்திருக்கிறது. 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் 2ம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் சிம்புதேவன் இறங்கியுள்ளார் என்பது தான் அந்த நல்ல செய்தி. இதுபற்றி இயக்குனர் சிம்புதேவன் கூறுகையில், 'இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நிறைய காட்சிகள் எடுக்க முடியாமல் போனது, அதை தற்போது கருத்தில் கொண்டு 2 பாகத்தை தயார் செய்து வருகிறேன், இதுபற்றி வடிவேலுவிடம் பேசியுள்ளேன், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்' என்றார். | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
பிரியாணியில் நான் தான் ஹீரோ | TechRenu 'பிரியாணி' படம் பற்றி தினமும் ஒரு தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி வந்த இன்றைய தகவல் என்ன தெரியுமா?... 'அண்ணன் இயக்கிய படத்தில் மங்காத்தாவை தவிர எல்லா படத்திலும் நான் தான் ஹீரோ, பிரியாணிலும் நான் தான் ஹீரோ' என்று சிரித்தபடியே பிரேம்ஜி அமரன் கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி 'என் அண்ணனை தவிர எந்த இயக்குனரும் முக்கிய கதாபாத்திரம் நடிக்க வைக்க தர தயாராக இல்லை, அதே சமயம் எங்க அண்ணனை 'என்ன நடிக்க வைக்கலனா நான் உன்னோட படத்தில் இசை அமைப்பேன்' என்று மிரட்டி வைத்திருக்கிறேன்' என்று சிரித்துக் கொண்டு சொன்னார். கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில் ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காக்டெய்ல் இந்தி படத்தில் நடித்த தியானா நடிக்க பேச்சு நடக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது.
| | | | | | | | | | | | | |  |  |  | | | | |
கிறிஸ்தவ மத முறைப்படி திருமணம் செய்ய விரும்புகிறேன்: நடிகை சுஷ்மிதாசென் || techRenu
முன்னாள் பிரபஞ்ச அழகியும், இந்திய நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 36 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் ரெனீ, அலிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை திருமணம் பற்றி வெளிப்படையாக பேசாத சுஷ்மிதாசென் தற்போது தனது திருமணம் பற்றி சீரியசாக பேச தொடங்கி உள்ளார். அரியானா மாநிலம் குர்காவனில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் சுஷ்மிதாசென் கலந்து கொண்டார். திருமணத்தின்போது, கிறிஸ்தவ மணப்பெண் அணியும் உடைபோல், அவரும் ஆடை உடுத்தி மேடையில் தோன்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கிறிஸ்தவ மத முறைப்படி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது எனது சிறுவயது கனவாகும். நான் எப்போதும் கிறிஸ்தவ மணப்பெண் போல் என்னை கற்பனை செய்து கொள்வேன். கிறிஸ்தவ திருமணங்களை பார்த்து எனக்கும் அதுபோன்ற ஆசை ஏற்பட்டது. எனவே கிறிஸ்தவ மத முறைப்படி உடை அணிந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம் எனது தந்தையின் விருப்பப்படி இந்திய பாரம்பரிய முறைப்படியும் திருமணம் செய்து கொள்வேன். தற்போது திருமணம் பற்றி சீரியசாக சிந்தித்து வருகிறேன். அநேகமாக அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம். எனது 16 வயதில் மாடலிங் தொழிலை தேர்வு செய்தேன். 3 ஆண்டில் அது எனக்கு போரடித்து விட்டது. எனவே சினிமா துறைக்கு மாற முடிவுசெய்தேன். சினிமாவில் இருந்தாலும் மாடலிங் தொழிலை மிகவும் நேசிக்கிறேன். அதில் எனக்கு சுதந்திரம் கிடைக்கிறது. மாடலிங் துறையில் உள்ள பழைய டிசைனர்கள் மற்றும் தோழிகளுடன் இணைந்து மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். சுஷ்மிதாசென் முன்பு டைரக்டர் மூடாஸார் அஜிஸ், நடிகர் ரந்தீப் ஹுடா ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார். சமீபத்தில் பேரீச்சம் பழ வியாபாரி இம்தியாஸ் கத்ரி உடன் கிசுகிசுக்கப்பட்டார். | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
பழைய பாடல்களுக்கு மீண்டும் 'மவுசு': சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பு | techRenu தமிழில் பொழுதுபோக்கு மற்றும் செய்தி சேனல்கள் கிட்டத்தட்ட 50 வரை நெருங்கிவிட்டன. இதனால் டி.வி.க்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. ஒவ்வொரு சேனல்களும் இசைப் பிரியர்களுக்காக தனியாக இசைச் சேனல்கள் தொடங்கி பாடல்களை ஒளிபரப்பி வருகின்றன. இவைகளில் முதலில் புதுப்பாடல்கள் ஒளிபரப்பட்டு வந்தன. 'தேன் கிண்ணம்', 'நீங்கள் கேட்டவை', 'உங்கள் விருப்பம்' போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் ஒன்றிரண்டு பழைய பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் சமீபகாலமாக ஒட்டு மொத்த சேனல்களும் பழைய பாடல்கள் பக்கம் திரும்பி உள்ளன. ஜெயா டி.வி., ஜெயா மேக்ஸ், ஜெயா மூவி சேனல்களில் பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி, டூயட் பாடல்களும் 80 களில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்களும் ஒளிபரப்பானது. இதற்கு ஏற்பட்ட வரவேற்பை தொடர்ந்து கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளும் பழைய பாடல்களுக்கு என தனி சேனல்களை தொடங்கி உள்ளன. அதில் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த கலர் படங்களின் டூயட் பாடல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இரவு நேரத்தில் மட்டும் கறுப்பு-வெள்ளை பாடல்களும் பழைய படங்களும் ஒளிபரப்பாகிறது. ஜெயா மேக்ஸ், சன், முரசு டி.வி.யை தொடர்ந்து ராஜ் டி.வி.யும், எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த டூயட் பாடல்கள் பக்கம் திரும்பி உள்ளது. எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்களில் இடம்பெற்ற டி.எம்.எஸ்.-சுசீலா குரலில் வெளிவந்த டூயட் பாடல்களுக்கு நேயர்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. டி.எம்.எஸ்-சுசீலா ஜோடியின் டூயட் பாடல் குரலை திருமணம் மற்றும் திருவிழாக்களில் ஒலிபெருக்கியில் மட்டுமே கேட்டு வந்த ரசிகர்கள் தற்போது சேனல்களில் கேட்க மிகவும் விரும்புகிறார்கள். தற்போதைய இளைய தலைமுறையினர்கூட பழைய பாடல்களை விரும்பி கேட்கிறார்கள். எம்.ஜி.ஆர். நடித்த 'உரிமைக்குரல்', 'நினைத்ததை முடிப்பவன்', 'உலகம் சுற்றும் வாலிபன்', 'மீனவ நண்பன்', 'ரிக்ஷாக்காரன்', 'இதயக்கனி', 'நல்லநேரம்', 'நம்நாடு', 'ஒளிவிளக்கு', 'ஆயிரத்தில் ஒருவன்', 'எங்கள் வீட்டு பிள்ளை', 'மாட்டுக்கார வேலன்', 'ஊருக்கு உழைப்பவன்' உள்ளிட்ட படங்களில் இருந்து சூப்பர் ஹிட் டூயட் பாடல்கள் திரும்ப திரும்ப ஒளிபரப்பினாலும் அவை சலிப்பு தட்டவில்லை. இதேபோல் சிவாஜியின் 'வசந்த மாளிகை', 'சிவந்தமண்', 'ஊட்டி வரை உறவு', 'டாக்டர் சிவா', 'அந்தமான் காதலி', 'திரிசூலம்', 'கவுரவம்', 'தங்கப் பதக்கம்', 'சொர்க்கம்', படங்களில் இருந்தும் சூப்பர் ஹிட் டூயட் பாடல்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் எம்.ஜி.ஆர்.-சிவாஜியின் பழைய பாடல்கள் ஒலிப்பதை கேட்க முடிகிறது. பழைய பாடல்களின் மவுசு புதிய பாடல்களை ஓரம் கட்ட வைத்துவிட்டது. பழைய பாடல்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜியின் அழகும் ஸ்டைலும் இந்த கால இளைஞர்களுக்கு வித்தியாசமாக இருப்பதாலும் ரசிக்கிறார்கள். இப்போது எதார்த்தம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற நிலையில் இந்த மாமேதைகளின் உடை அழகும், டூயட் காட்சி நடிப்பும் இன்றைய இளைஞர்களுக்கும் பிடித்து போய் உள்ளது. பழைய ரசிகர்களுக்கோ தெவிட்டாத வண்ணம் உள்ளது. | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
தப்பு மேல் தப்பு.. கண்டித்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற ஆசிரியர்! | TechRenu தர்மபுரி: தர்மபுரியில், தனது கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, யாரோ வந்து கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்து விட்டதாக நாடகமாடி கைதாகியுள்ளார்.தர்மபுரி ஏ.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவருக்கு 45 வயதாகிறது. முண்டாசுபறவடை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இவருக்கு 40 வயதில் பூங்கொடி என்ற மனைவி இருந்தார். இவரும் தலைமை ஆசிரியைதான். கூன்மாரிக்கொட்டாய் அரசு தொடக்கப் பள்ளியில் இவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றினார்.இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் பூங்கொடிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்காக மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார் பூங்கொடி. அவரது தாயார் உடன் இருந்து பார்த்து வந்தார்.16ம் தேதி மாலை, பூங்கொடி வீட்டுக்கு அருகில் உள்ள தனது இன்னொரு மகளின் வீட்டுக்கு தாயார் போயிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பூங்கொடி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது கழுத்தில் கிடந்த 15 பவுன் நகைகளையும் காணவில்லை.இதையடுத்து சிவானந்தம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாணையில் இறங்கியபோது சிவானந்தம் மீ்து சந்தேகம் திரும்பியது. இதையடுத்து அவரை தீவிரமாக விசாரித்தபோது தான்தான் பூங்கொடியைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.இதுகுறித்து போலீஸாரிடம் சிவானந்தம் கூறுகையில், எனக்கும், நான் வேலை பார்த்து வந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அதேபோல பூங்கொடியின் உறவுக்காரப் பெண் ஒருவருடனும் தொடர்பு ஏற்பட்டது.இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி என்னைக் கண்டித்தார். மேலும் உறவினர்களிடமும் இதுகுறித்து அவர் முறையிட்டார். இதனால் நான் அவமானமடைந்தேன்.சம்பவத்தன்று நான் பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. கோபமடைந்த நான் பூங்கொடியை அடித்தேன். பின்னர் கழுத்தில் துண்டைப் போட்டு நெரித்துக் கொலை செய்தேன். பிறகு பூங்கொடியின் கழுத்தில் இருந்த நகைகளை எடுத்து பீரோவில் மறைத்து வைத்தேன். பிறகு போலீஸில் புகார் கொடுத்தேன் என்றார்.இதைத் தொடர்ந்து சிவானந்தத்தை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.Thanks to OneIndia | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
சல்மான் 'பாடி'யுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படும் ஹாலிவுட் 'லேடி' யுவெட் ஷா! | TechRenu மும்பை: ஹாலிவுட்டிலிருந்து ஒரு வெயிட்டான நடிகையை பாலிவுட்டுக்குக் கொத்திக் கொண்டு வந்துள்ளார் தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி. வீணா மாலிக் நடிக்கும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் இந்த ஹாலிவுட் நடிகையும் நடிக்கிறார். அவரது பெயர் யுவெட் ஷா. ஹாலிவுட்டின் கட்டுடல் அழகி யுவெட் ஷாவுக்கு ஹாலிவுட்டின் கட்டுடல் அழகி என்று பெயர் உண்டாம். காரணம், ஆண்களுக்கு நிகராக இவரும் மஸ்ஸில் பவருடன் படா மிரட்டலாக இருப்பதால். பாலிவுட்டுக்கு முதல் என்ட்ரி பாலிவுட் சினிமா மீது ஆர்வம் கொண்டவரான யுவெட்டுக்கு தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படம்தான் முதல் படமாம். இதனால் படு ஆர்வமாக இருக்கிறார். சல்மான் பாடி பிடிக்கும்.. சிலாகிக்கும் யுவெட் சல்மான் கான் என்றால் யுவெட்டுக்கு ரொம்ப இஷ்டமாம். அதுவும் அவரது கட்டுடலுக்கு இவர் பெரும் ரசிகையாம். சல்மான் கான் தான் உண்மையான ஆண்மகன். அவர் இருக்கும் பாலிவுட்டில் நான் நடிக்கவிருப்பது சந்தோஷம் தருகிறது. சல்மானுடன் சேரணும்... யுவெட்டின் ஆசை சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப மகிழ்வேன். பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் சிலாகிப்புடன். அர்னால்டுடன் நடித்தவர் ஹாலிவுட்டில் அர்னால்ட் ஸ்வார்சனீகர் உள்ளிட்ட ஆக்ஷன் நாயகர்களுடன் நடித்த அனுபவம் உடையவர் யுவெட். உலகின் மிக வலிமையான உடலமைப்பு கொண்ட நடிகை என்ற பெயரையும் பெற்றவராம். வீணாவுடன் மோதுவாரோ..! 'பாடிபில்டராக' காட்சியளிக்கும் யுவெட், 'கவர்ச்சி பில்டரான' வீணா மாலிக்குடன் சேர்ந்து நடிக்கவிருப்பதால் இருவருக்கும் ரோல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இருவருக்கும் இடையே சண்டைக் காட்சி எதையாவது இயக்குநர் வைப்பாரா என்ற எதிர்பார்ப்ப்பும் கிளம்பியுள்ளது!Thanks to OneIndia | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
அப்பா மல்லையா லண்டனில்.. 'கேர்ள்ஸைத்' தேடி மகன் பிசி.. பரிதவிப்பில் கிங்பிஷர் குடும்பங்கள்! | TechRenu பெங்களூர்: கிங்பிஷர் ஊழியர்கள் பெரும் தவிப்பில் தகித்துக் கொண்டுள்ள நிலையில் அதன் உரிமையாளரான விஜய் மல்லையா தென் கொரியாவில் போய் உட்கார்ந்து கொண்டுள்ளார். மகன் சித்தார்த் மல்லையாவோ, 2013ம் வருட காலண்டருக்கு எந்த அழகியைப் போடுவது என்று லண்டனில் உட்கார்ந்து கொண்டு பிசியாக ;பெண்; பார்த்துக் கொண்டுள்ளார்.ரத்தான கிங்பிஷர் லைசென்ஸ் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவிதி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது. அதன் லைசென்ஸை ரத்து செய்து விட்டது. இதனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பெரும் தவிப்பிலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர். ரேஸ் பார்க்க ஓடிப் போன மல்லையா நிலைமை இப்படி மோசமாக இருக்கும் நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் கார்ப் பந்தயத்தைப் பார்க்க ஓடி விட்டாராம் விஜய் மல்லையா. இருப்பினும் தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதே கிங்பிஷர் நிறுவனத்திற்குத் தெரியவில்லையாம். மகனுக்கு காலண்டர் கேர்ள்ஸ் கவலை! அப்பா மல்லையா இப்படி இருக்க மகன் சித்தார்த்துக்கோ 2013ம் ஆண்டுக்கான காலண்டர் அட்டையில் எந்த அழகியைப் போடுவது என்ற கவலையாம். அவர் அழகான கேர்ள்ஸைத் தேடி, பிக்ஸ் செய்யும் பணியில் படு பிசியாக இருக்கிறாராம்.நல்ல பொண்ணா பார்க்கிறேன்! இதுகுறித்து டிவிட்டரில் அவர் போட்ட மெசேஜைப் பாருங்கள்...தோழர்களே, கிங்பிஷர் 2013 காலண்டர் அழகியைத் தேடும் பணியில் பிசியாக இருக்கிறேன். கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவேன். பப்பில் ஒரே கூட்டமாம்.. இது சித்தார்த்தின் இன்னொரு டிவிட் அதேபோல அவர் வெளியிட்டுள்ள இன்னொரு டிவிட்டில் தான் லண்டனில் இருப்பதை சொல்லியுள்ளார். அதாவது அங்குள்ள பப்புக்குப் போனாராம், பப்பில் ஒரே கூட்டமாம், லண்டன் கிளைமேட் சூப்பரா இருக்காம், அங்கு இருப்பதே சொர்க்கமாக இருக்கிறதாம். நான் ஏன் லண்டனை விட்டு வரணும்...?? இப்படிப்பட்ட சூழலில் நான் ஏன் லண்டனை விட்டுக் கிளம்பனும் என்றும் சித்தார்த் கேட்டிருப்பதுதான் சோகத்தின் உச்சகட்டம். பரிதாபத்தில் கிங்பிஷர் ஊழியர்கள் இப்படி அப்பாவும்,மகனும் ஆளுக்கு ஒரு நாட்டில் போய் உட்கார்ந்து கொண்டிருப்பதால், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பெரும் சோகத்திலும், கோபத்திலும், வேதனையிலும் மூழ்கியுள்ளனர். | | | | | | | | | | | | | |  |  |  | | | | |
சுடச்சுட கிளிப்பிங்ஸ் 21-10-2012 | TechRenu அமீர் இயக்க, ஜெயம் ரவி நடிக்கும் 'ஆதிபகவன்' படத்துக்கு ஒரு இந்தி பாடல் படமாக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகை நீத்து சிங் நடனம் ஆடி இருக்கிறார். அறிமுக இயக்குனர் சினேகாவின் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் ஆடியோ விழாவில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி, திறமைசாலிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. இப்போதைய படங்களில் குத்துப்பாடல்கள் இடம்பெறுவது நல்ல மாற்றம். வரவேற்கத்தக்கது என்று குத்தாட்ட நடிகைகளுக்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதேவி. நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றால் மறக்காமல் ஷாப்பிங் செய்துவிடுவாராம் வில்லன் நடிகர் சோனு சூட்.
| | | | | | | |  |  |  |  |  | |
0 comments:
Post a Comment